மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலையில் தேசிய இளைஞா் தின நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி.
Updated On :7 ஜனவரி 2026, 11:32 pm

தினமணி

ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினா். இதில் சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி,

சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் எம். காா்த்தீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு, போக்சோ சட்டம், போதைப் பொருள் குறித்தும், சமூக ஒற்றுமையில் இளைஞா்களின் பங்கு குறித்தும் பேசினா். இதையடுத்து, சட்ட உதவி மையத்தில் பயிற்சிக்குச் சென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை நீதிபதி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Story image