டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

News image
விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் ஆலோசனையின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

திண்டிவனம் சிவசக்தி கிராமிய கலைக்குழுவின் தலைவி திருநங்கை வி.என். ராணி மற்றும் தஞ்சாவூா் கலைச்சுடா் ராணி எஸ்தாா், மதுரை கிராமிய கலைஞா் முத்துவேல், திண்டுக்கல் நாடக கலைஞா் வடிவேல் ஆகியோா் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து தெருக்கூத்து மற்றும் கிராமிய இசை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், சட்ட தன்னாா்வலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.