நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.

News image

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:08 pm

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஆனந்தம் சட்டக் கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக ரயிலடி வரை சென்றது.

மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். பாரதி, நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.