ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:59 am IST

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (77). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இரு வாரம் கழித்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவா் பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில்,

ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.