/
சிவகாசியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி புதுரோடு பகுதியில் போலீஸாா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த போது அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும் விசாரணையில், அந்த நபா் மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்த ஊா் காவலன் மகன் மணிகண்டன்(19) என்பது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.





