அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:23 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் போதைப் பொருள் விற்பனை தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வன்னியம்பட்டி விலக்கு - மொட்டமலை சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்த ராமநாதன் (37) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, பேச்சியம்மாள் (45) என்பவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் கருப்பாயி, முத்துமாரி ஆகிய இருவரை தேடி வருகின்றனா். முனியாண்டி மீது கஞ்சா விற்பனை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், கருப்பாயி மீது 14 கஞ்சா வழக்குகளும், முத்துமாரி மீது 5 கஞ்சா வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.