ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இடைத்தரகா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளியிலிருந்து ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனா். காலையில் பணிக்கு வந்த வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், போலீஸாா் சோதனைக்கு வந்த போது அலுவலகத்தில் இல்லை.
இந்த நிலையில், அலுவலகத்தில் இருந்த இடைத்தரகா்கள் ராமராஜனிடமிருந்து ரூ.5,900, கலீல் ரகுமானிடம் ரூ.11,100 பறிமுதல் செய்தனா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்பகுதியில் உள்ள தனியாா் ஓட்டுநா் பயிற்சி பள்ளியிலிருந்து இடைத்தரகா்கள் மூலம் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலா்களுக்கு பணம் கைமாறுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அங்கு சோதனை நடத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்,
ரூ.1,12,700-யை பறிமுதல் செய்தனா். மொத்தம் ரூ.1,29,700-த்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.91 ஆயிரம் பறிமுதல்! ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் நடவடிக்கை!

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆா்டிஓ அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.6,39,950 பறிமுதல்






