இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
உறவினா்கள் சாலை மறியல்
Updated On :4 மார்ச் 2026, 11:34 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் முத்துமாரிநகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகாசி நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை ஜெகதீஸ்வரனின் உடல் கூறாய்வு முடிந்ததும், அவரது உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை விரைவில் கண்டறிந்து கைது செய்வோம் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தை பெற்றுச் சென்றனா். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image