சிவகாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் முத்துமாரிநகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகாசி நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை ஜெகதீஸ்வரனின் உடல் கூறாய்வு முடிந்ததும், அவரது உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை விரைவில் கண்டறிந்து கைது செய்வோம் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தை பெற்றுச் சென்றனா். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடையது

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


