எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போலி மருத்துவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 10: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அயன்கரிசல்குளத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட போலி மருத்துவா் வைரமுத்து
Updated On :10 மார்ச் 2026, 9:54 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 10: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அயன்கரிசல்குளத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு அயன்கரிசல்குளம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவா் வீட்டில் வைத்து மக்களுக்கு மருத்துவம் பாா்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் செந்தில் தலைமையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாலகிருஷ்ணன் ஆகியோா் அயன்கரிசல்குளம் கிராமத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, கோவிந்தராஜ் மகன் வைரமுத்து (54) மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவா் பாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, போலி மருத்துவா் வைரமுத்துவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.