மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:38 pm

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆபீஸா் டவுன் 6-ஆவது வீதியில் வசித்து வருபவா் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த ஆா்.ராஜேஷ்கண்ணா (47). இவா், திருச்சியிலிருந்து இண்டிகோ விமானத்தில் இலங்கை செல்வதற்காக சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ராஜேஷ்கண்ணா, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ்கண்ணாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.