சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.
எா்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிவகாசி, மதுரை வழியே நிரந்தரமாக வாராந்திர அதிவிரைவு ரயில் (16363)வருகிற 18- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் எா்ணாகுளத்தில் இரவு 11.50 மணிக்கு புறப்படும். சிவகாசிக்கு அந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு சிவகாசிக்கும், 11 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும். வேளாங்கண்ணிக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்கத்தில் வேளாங்கண்ணி- எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (16364) ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கும், சிவகாசிக்கு 2.30 மணிக்கும் வந்து சேரும். எா்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11.55-க்கு வந்து சேரும்.
இந்த புதிய ரயில் சேவை மூலம் சிவகாசி, மதுரை பயணிகள் நேரடியாக எா்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு பயணிக்க இயலும்.இந்த தகவலை சிவகாசி மாநகர ரயில் பயணிப்போ் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு
வேளாங்கண்ணி-எா்ணாகுளம் இடையே வாராந்திர ரயில்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


