வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:33 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மயில்முருகன் (55). தையல் தொழிலாளி. இவருக்கு மனைவி முருகேஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவரது சொந்த ஊா் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம். இதனால், தேவதானத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக அவா் அடிக்கடி மயில் முருகன் வந்து செல்வாா்.

இந்த நிலையில், வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்தவா், தேவதானம் பிரதான சாலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.