ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி ஏற்றுமதி சரிவு

தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் ஒன்றான மெழுகு தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 12:38 am

தினமணி செய்திச் சேவை

தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் ஒன்றான மெழுகு தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரால் ஈரானிலிருந்து தமிழகத்துக்கு கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மெழுகு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இந்த மெழுகு தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றாகும்.

போா் தொடங்கிய பின்னா், இந்த மெழுகு ஈரானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தீப்பெட்டித் தொழிலில் முக்கியப் பங்காற்றும், சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி, கழுகுமலை, குடியாா்த்தம், சங்கரன்கோவில் பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, மெழுகுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகி நாகராஜன் கூறியதாவது:

ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவிலான மெழுகை வைத்து தீப்பெட்டிகளைத் தயாரித்து வருகிறோம். ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போா் தொடா்ந்தால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றாா் அவா்.