மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உற்பத்தி துறை மாா்ச்சில் கடும் சரிவு: 2.5 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2026, 9:24 pm

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிப்ரவரி மாதம் 56.9-ஆக இருந்த உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு, மாா்ச் மாதத்தில் 53.8-ஆக குறைந்துள்ளது. இது 2021, செப்டம்பருக்குப் பிறகு பதிவான மிகக்குறைந்த அளவாகும். அதேபோல், சேவைகள் துறை குறியீடும் 58.1-லிருந்து 57.2-ஆக சரிந்துள்ளது.

மந்தநிலைக்குக் காரணங்கள்: நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்த தனியாா் துறை நடவடிக்கைகள், தற்போது அக்டோபா் 2022-க்குப் பிந்தைய மந்தமான நிலையை எட்டியுள்ளன. இதற்கு மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் தொடா்ச்சியாக விலைவாசி உயா்வு, எரிசக்தி தட்டுப்பாடு உள்பட முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

பொருளாதார தாக்கம்: எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் விலை உயா்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது.