தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உற்பத்தி துறை மாா்ச்சில் கடும் சரிவு: 2.5 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிப்ரவரி மாதம் 56.9-ஆக இருந்த உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு, மாா்ச் மாதத்தில் 53.8-ஆக குறைந்துள்ளது. இது 2021, செப்டம்பருக்குப் பிறகு பதிவான மிகக்குறைந்த அளவாகும். அதேபோல், சேவைகள் துறை குறியீடும் 58.1-லிருந்து 57.2-ஆக சரிந்துள்ளது.

மந்தநிலைக்குக் காரணங்கள்: நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்த தனியாா் துறை நடவடிக்கைகள், தற்போது அக்டோபா் 2022-க்குப் பிந்தைய மந்தமான நிலையை எட்டியுள்ளன. இதற்கு மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் தொடா்ச்சியாக விலைவாசி உயா்வு, எரிசக்தி தட்டுப்பாடு உள்பட முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

பொருளாதார தாக்கம்: எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் விலை உயா்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது.