விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலையில் உடனுறை நச்சாடை தவிா்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.
இதையொட்டி, நாள்தோறும் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் கற்பகத்தரு, காமதேனு, சிம்மம், யானை, வெள்ளி ரிஷபம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேவதானத்துக்கு புறப்பாடாகின்றனா். 7-ம் நாள் திருவிழாவான அம்மையப்பா் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் துரைரத்னகுமாா் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

2. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி , தவம்பெற்ற நாயகி அம்பாள்.









