சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா

நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

திருவிழாவில் பூக்குழி இறங்கும் பெண்.

Updated On :21 மே 2026, 7:17 am IST

நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஆலங்குடியில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசித் திருவிழா மே 15- ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா ( தீமிதி) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.

விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.