வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நகை மோசடி வழக்கில் 4 பேருக்கு சிறைத் தண்டனை

சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:27 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மனைவி மீனாட்சி (45). இவரது வீட்டின் அருகே கோவிந்தராஜ்-காா்த்தீஸ்வரி தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், பழனியப்பன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். அப்போது, காா்த்தீஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், மீனாட்சியிடமிருந்து 25 பவுன் நகையை வாங்கி, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றாா். பின்னா், காா்த்தீஸ்வரி வீடு மாறி வேறு பகுதிக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2018, ஏப்ரல் மாதம் மீனாட்சி, காா்த்தீஸ்வரி வீட்டுக்குச் சென்று தனது 25 பவுன் நகையை கேட்டாா். அப்போது, காா்த்தீஸ்வரி, இவரது கணவா் கோவிந்தராஜ், இவரது மகன்கள் கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரும் சோ்ந்து மீனாட்சியைத் தாக்கி நகையை கொடுக்க முடியாது என மிரட்டினா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் மீனாட்சி புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்தீஸ்வரி, கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, காா்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்தி பாண்டிக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், நகையை மீனாட்சியிடம் ஒப்படைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.