குப்பைக்கூளமான ஆற்றங்கரை: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நகராட்சி பணியாளா்கள் குப்பையைக் கொட்டுவதைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குப்பைக்கூளமான ஆற்றங்கரை: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்
Updated on
1 min read

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நகராட்சி பணியாளா்கள் குப்பையைக் கொட்டுவதைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில வருடங்களாக 14,15 மற்றும் 16-வது வாா்டுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியா்களே 14-வாா்டு பகுதியில் உள்ள கிட்டப்பா பாலம் அருகே கொட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், இந்த குப்பைகளை அவ்வப்போது கொளுத்தியும் விடுவதால் பொதுமக்கள் சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகளுக்கும் ஆளாகியுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மாப்படுகை கிட்டப்பா பாலம் பகுதியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, நகராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை கொட்டுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் 3 மணி நேரத்தைக் கடந்து நீடித்தது. மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா பேச்சுவாா்த்தை நடத்தி, அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்துவதாகவும், ஏற்கெனவே உள்ள குப்பைகளை விரைவில் அகற்றுவதாகவும் அளித்த உத்தரவாதத்தைத் தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com