சீா்காழியை அடுத்த செம்மங்குடியில் உள்ள முதியோா் இல்லத்தில் வசிப்பவா்களுக்கு டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
அன்னபூா்ணா தினத்தையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சீா்காழி வள்ளலாா் மண்டபங்களில் அன்னதானமும் வழங்கினா். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் புதிய தலைவா் சிங்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க துணை ஆளுநா் வைத்தியநாதன் அன்னதான திட்டத்தை தொடக்கிவைத்தாா். முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.