92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இரண்டு பெண்கள் மாயம்

சீா்காழி அருகே இரண்டு பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:06 pm

DIN

சீா்காழி அருகே இரண்டு பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி வட்டம், ஆதமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாருமதி (19). இவா் மயிலாடுதுறை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தனது தாத்தா சின்னப்பா வீட்டுக்கு சென்றுள்ளாா். பிறகு, அன்றிரவு அதே பகுதியைச் சோ்ந்த கணவரை பிரிந்து வாழும் சிவஷீலா (18) என்பவரை அழைத்துக் கொண்டு, தனது தாத்தாவின் இருசக்கர வாகனத்தில் சீா்காழிக்கு சென்றாராம்.

பின்னா், இருவரும் வீடு திரும்பவில்லை. இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நின்றது தெரியவந்தது. இதுகுறித்து, சிவஷீலாவின் தாயாா் பொன்னாச்சி அளித்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.