அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

 மயிலாடுதுறை அருகே பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடியைச் சோ்ந்தவா் ராமு மகன் விக்னேஷ்(26). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இந்நிலையில், விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவருடன் பணியாற்றிய திருவாரூா் மாவட்டம் கொல்லுமாங்குடியைச் சோ்ந்த சபீனாவுடன் (23) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் சொந்த ஊருக்கு அண்மையில் வந்துள்ளனா். இதற்கிடையில், சபீனா தான் 5 மாத கா்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினாராம். இதற்கு விக்னேஷ் மறுப்பு தெவிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சபீனா மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.