சாலையோர பதாகைகள் அகற்றம்
காரைக்காலில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.


காரைக்காலில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.
புதுவை மாநிலத்தில் டிஜிட்டல் பதாகைகள் வைக்க தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும், தடையை மீறி சாலையோரங்களில் வைக்கப்படும் பதாகைகள் காற்றில் சாய்ந்து விழுந்து அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. எனவே டிஜிட்டல் பதாகைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அப்புறப்படுத்தினா்.
அனுமதியின்றி இவ்வாறு பதாகைகள் வைக்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...