ஸ்டேன் சுவாமி மரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி இறப்பு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.கணேசன், ஜீவானந்தம், சிங்காரவேலன், மாரியப்பன், ஒன்றியச் செயலாளா் சி.மேகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.