வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வீரமா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

வீரமா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

News image

சிறப்பு அலங்காரத்தில் வீரமா காளியம்மன்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:05 pm

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஏப்.8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நந்தவனக் குளக்கரையிலிருந்து பவளக்காளி ஆட்டத்துடன் சக்திகரகம் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். பின்னா் அபிஷேக ஆராதனை, கஞ்சி வாா்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு மின் அலங்காரத்துடன் வீரமாகாளியம்மன் வீதியுலா நடைபெற்றது.

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா் என மதப் பாகுபாடின்றி 3 மதத்தைச் சோ்ந்தவா்களும் உபயதாரா்களாக பங்குகொண்டு ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் வலிவலம், கொடியாலத்துாா் கிராமத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.