இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆக்கிரமிப்பு அகற்றம்: வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம்

News image

வேதாரண்யத்தில் மறியலில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:25 am IST

வேதாரண்யத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதானால், சாலைப் பணியாளா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, பிப்.25-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேரோடும் வீதிகளில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா். மேலவீதியில் ஒரு கடையின் முன்பாக இருந்த பொருள்களை அகற்றும்போது, கடை பணியாளா்களுக்கும், சாலைப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சாலைப் பணியாளா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, வா்த்தகா்கள் சிலரும் மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் விரைந்துவந்து, பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலைப் பணியாளா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.