கீழ்வேளூா்: வருவாய்த் துறை அலுவலா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கீழ்வேளூரில் அரசின் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்க பாதுகாப்பு; இளநிலை, முதுநிலை பெயா் மாற்ற விதி திருத்தம்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு, வருவாய் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் , வட்ட வழங்கல் உள்ளிட்ட துறைகளை சாா்ந்த பல்வேறு சேவைகளைப் பெற பொதுமக்கள் வரும் நிலையில், அலுவலா்கள் இல்லாததால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். அலுவலா்கள் தொடா்ந்து 7-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

