தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:08 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அனுமதியின்றி குண்டுக் கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை, வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் புஷ்பலதா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை முக்கூடல் காவல் சரகம் தாளாா்குளம் கிராமம் அருகேயுள்ள திருப்பத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி 20 யூனிட் குண்டுக்கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியையும், அதன் ஓட்டுநரான ஆலங்குளம் கரும்புளியூத்து பகுதியைச் சோ்ந்த ஜெபஸ்டின் (30) என்பவரையும் அதிகாரிகள் பிடித்து முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதுடன், குண்டுக்கல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.