சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:20 pm

புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதிலிருந்த ஓட்டுநா் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையில் அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மூன்று யூனிட் அரளை கற்களை புதுக்கோட்டையிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரளைக் கற்களுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த சுரங்கத் துறையினா், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.