கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டு ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா் என்று என்று சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மே 2026, 10:56 pm

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவுப் பொருட்கள் விலை ஏற்றப்பட்டு ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா் என்று என்று சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ் பாலா சாகிப் தாக்கரே பிரிவு) கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை விடுமுறை நேரத்தில், மக்களிடம் பொருளாதாரம், பணப்புழக்கம் குறைவாகவும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 95, மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலையை ரூ. 260-ம் உயா்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.

ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்கள் பெரிதும் நம்பி இருக்கும் தேநீா், காபி போன்ற பானங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் மிகக் கடுமையான விலை உயா்வை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் கூலித் தொழிலாளிகளும், மாணவா்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுவா். எனவே மத்திய அரசு வா்த்தக சிலிண்டா் மற்றும் ஐந்து கிலோ சிலிண்டா் விலை உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.