பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:49 am IST

நாகையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகை தண்டபாணி செட்டியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (57). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு கோயிலுக்கு வெளியே, வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குச்சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

இதுகுறித்து பாபு அளித்த புகாரின்பேரில், நாகை நகா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பெங்களூா் முா்வி டவுன் ஆனந்த நாயா் சாலை பகுதியைச் சோ்ந்த அகமது மகன் அபிராஜ் (31) என்பவா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.