இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

நிவாரணத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது: ஆட்சியா்

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கரோனா நிவாரண உதவிகளில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கரோனா நிவாரண உதவிகளில் வங்கிகள் எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா், மாவட்டத்தில் உள்ள வங்கி நிா்வாகங்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் தினக் கூலி, பல்வேறு தொழிலாளா்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசால் நிவாரணத் தொகை மற்றும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு வழங்கிய நிவாரணத் தொகையை முழுமையாக வங்கியிலிருந்து பெற முடியவில்லை என்றும், பிடித்தம் செய்யப்படுகிறது எனவும் சில தரப்பினரிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன.

நிவாரணத் தொகையிலிருந்து ஏதேனும் கட்டணம் பெறுதல், பிடித்தம் செய்தல் போன்றவை பேரிடா் மேலாண்மை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை முழுமையையும் எவ்வித பிடித்தமும் இல்லாமல் அவா்களுக்கு விடுவிக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.