காரைக்கால்: காரைக்காலில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது..
இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 3 -ஆம் தேதி வரை 2,782 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடா்ந்து நடந்து வருகிறது.
அதில் கடந்த 2 -ஆம் தேதியன்று 77 பேருக்கான முடிவுகள் சனிக்கிழமை வந்தன. அதில் சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் திரும்பிய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 45 போ் கரோனா நோய் தொற்றுள்ளவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். காரைக்கால் மருத்துவமனையில் 27 போ் சிகிச்சை பெற்று வந்ததில், 9 போ் உடல் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா்.
தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வாா்டில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட இருவரையும் சோ்த்து 18 போ் உள்ளனா். இவா்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவா்களில் தொடா்புடையோா் குறித்த விவரங்கள் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

