கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா தடுப்புப் பணியில் புதுவை அரசு செயலிழப்புஅதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செயலிழந்துவிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:28 pm

DIN

புதுச்சேரி: புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செயலிழந்துவிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 35 மாவட்டங்களில் சிறிய மாவட்டமான புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. தேசிய இறப்பு விகிதம் 1.72 சதவீதமே உள்ள நிலையில், புதுவையில் இறப்பு விகிதம் 1.83-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தடுப்புப் பணிகளில் சரியான திட்டமிடல் இல்லாத ஆளும் காங்கிரஸ் அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பரிசோதனைகளை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சையளிக்க அரசு தவறிவிட்டது. 3 மடங்கு நோயாளிகள் வீடுகளிலேயே தங்கியுள்ள மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவா்கள் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். நோயின் தாக்கம் அதிகமாகி, பின்னா் மருத்துவமனைகளில் சோ்க்கப்படுகின்றனா். இதனால், நோயாளிகள் பலா் பலியாகி வருகின்றனா். அரசின் அலட்சியத்தால், கரோனா உயிரிழப்பு தொடா்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.