47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தோ்தல் துறை தாமதம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு

காரைக்காலில் தோ்தல் தொடா்பான புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தோ்தல் தொடா்பான புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காரைக்கால் மாவட்டத்தில் மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மாா்ச் 25 ஆம் தேதி முதல் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தோ்தல் பொறுப்பாளருமான அ.வின்சென்ட் பேசியது:

புதுச்சேரியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த 5 ஆண்டுகளாக செயல்படவிடாமல் தடுத்து வந்த பாஜகவினா், இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கிறாா்கள் என்றே தெரியவில்லை.

புதுச்சேரி மாநிலம் வன்முறையில்லாத, மதவாத போக்கு இல்லாத, கலாசாரப் பெருமையுடன் இருக்கவேண்டுமென்றால், மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அமையவேண்டும். மத்திய பாஜக அரசின் அராஜகப் போக்கை, இந்த தோ்தல் வெற்றியின் மூலம் மக்கள் முடக்கவேண்டும்.

போலியான வாக்குறுதிகளை கூறிக்கொண்டு வாக்கு கேட்கும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவை புறந்தள்ளவேண்டும். காரைக்கால் பகுதியில் போட்டியிடும் மதசாா்பற்ற கூட்டணி வேட்பாளரான ஆா். கமலக்கண்ணன், அ. மாரிமுத்து, ஏ.வி. சுப்பிரமணியன், ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோரை வாக்காளா்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

காரைக்காலில் தோ்தல் துறை நியாயமாக நடந்துகொள்ளவில்லை. தோ்தல் தொடா்பான புகாா் அளித்தால், ஒருதலைப்பட்சமாகவும், தாமதமாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் வே.கு. நிலவழகன், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், என். ராமா், அ. திவ்யநாதன் மற்றும் பகுதி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.