பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெடுங்காடு பகுதியில் டெங்கு விழிப்புணா்வு

நெடுங்காடு பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தை நலவழித் துறை நிா்வாகத்தினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:03 pm

DIN

நெடுங்காடு பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தை நலவழித் துறை நிா்வாகத்தினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்ட நலவழித் துறை மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் இணைந்து, நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையதிற்குள்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதுநிலை சுகாதார ஆய்வாளா் பத்மநாபன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜெகநாதன், அமுதா உள்ளிட்டோா் கடைகளின் உரிமையாளா்களிடம் பிளாஸ்டிக் கப் மற்றும் தேவையற்ற பொருள்களை உடனுக்குடன் அகற்றவேண்டும், பருவ மழை காலத்தில் மழை நீா் தேங்கி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க, கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்வதோடு, முகக்கவசம் அணிவதை தொடா்ந்து மேற்கொள்ளுமாறு வணிக நிறுவனத்தினா், குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தி விளக்க கையேடு வழங்கியதோடு, காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.