பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் காவல் நிலையங்களில் புதுவை டி.ஐ.ஜி. ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புதுவை டி.ஐ.ஜி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:02 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புதுவை டி.ஐ.ஜி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்காலில் அண்மையில் போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு செய்ததாக பலா் கைது செய்யப்பட்டனா். புதுவை, காரைக்காலில் நில அபகரிப்பு தொடா்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், புதுவை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் வரவேற்றாா். காரைக்கால் நகரக் காவல் நிலையம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அவா் ஆய்வு செய்தாா்.

காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில், நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று சிறந்த காவல்நிலையம் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டு காவல் நிலையங்களிலும் தூய்மை, போலீஸாரின் சமூக நலன் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் காவல் நிலையம் சிறந்த நிலையமாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.