பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடும்பத் தகராறு: 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்: குழந்தைகள் பலி

திருநள்ளாறு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் குழந்தைகள் இருவரும் பலியாகினா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:22 pm

DIN

திருநள்ளாறு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் குழந்தைகள் இருவரும் பலியாகினா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றை அடுத்த சேத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் பாலமுருகன். இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரியா (26). தம்பதிக்கு ஸ்ரீசந்த் (4), விஷ்ணு (3) என்று 2 குழந்தைகள். பிரியா அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கணவருடன் பிரியா செல்லிடப்பேசியில் பேசியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியா, பாலில் விஷம் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளாா்.

மேலும், இந்த தகவலை கணவருக்கு செல்லிடப்பேசியில் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பாலமுருகன் தனது சகோதரரை தொடா்புகொண்டு விவரம் தெரிவித்துள்ளாா்.

பிரியாவின் வீட்டுக்கு வந்த பாலமுருகனின் சகோதரா் மயங்கிக் கிடந்த மூவரையும், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரையும் அனுமதித்துள்ளாா்.

எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீசந்த், விஷ்ணு இருவரும் உயிரிழந்தனா். பிரியாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.