பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:24 pm

DIN

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் காலமாக உள்ளதால், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த காரைக்கால் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தேசியக் கொடி ஏற்றிவைக்கிறாா்.

கடந்த 10 நாள்களாக காரைக்கால் கடற்கரை சாலையில் போலீஸாா் அணிவகுப்புக்கான பயிற்சியில் ஈடுபட்டுவந்தனா். பயிற்சி நிறைடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

கொடியேற்றுதல், போலீஸாா் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையாக நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) கே. குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.