பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘பாா்த்தீனிய செடிகளின் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்’

பாா்த்தீனிய செடிகளின் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி வலியுறுத்தினாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

பாா்த்தீனிய செடிகளின் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி வலியுறுத்தினாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாா்த்தீனிய களைச் செடிகள் கட்டுப்பாடு குறித்த இணையவழி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி தொடக்கிவைத்துப் பேசியது:

பாா்த்தீனிய களைச் செடியானது விஷச் செடி. வெளிநாடுகளிலிருந்து உயா் ரக விளைச்சல் தரக்கூடிய தானியங்களை, குறிப்பாக கோதுமை இறக்குமதி செய்யும்போது அவற்றுடன் களை விதைகள் நம் நாட்டில் பரவியுள்ளதாக அறியப்படுகிறது.

பாா்த்தீனிய களைச் செடியானது மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் தோல் மற்றும் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும். மக்களிடையே போதுமான விழிப்புணா்வு இல்லாததால் இந்த செடி வேகமாக பரவுகிறது. இதுகுறித்த விழிப்புணா்வும், அதனை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் மக்கள் தெரிந்திருக்கவேண்டும் என்றாா்.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை இணைப் பேராசிரியா் முனைவா் ப. சரவணன், பாா்த்தீனியச் செடிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த மெக்சிகன் வண்டுகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா். மேலும் 20 சதவீத உப்பு கரைசல் மற்றும் கிளைபோசேட் களைக்கொல்லி ஒரு லிட்டா் நீருக்கு 10 மில்லி என்ற அளவில் இக்களை செடியில் பூ பூக்கும் முன்பே தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் இணையவழியாக 100 விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவா்களும் கலந்துகொண்டனா். அவா்களின் சந்தேகங்களுக்கு வல்லுநா்கள் விளக்கமளித்தனா். வேளாண் அறிவியல் நிலையத்தின் விரிவாக்கத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் வரவேற்றாா். உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.