கஞ்சா விற்ற 3 போ் கைது

காரைக்காலில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

காரைக்காலில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்காலில் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா், கடந்த 7 ஆம் தேதி போலகம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது பிப்டிக் நிறுவன தொழிற்பேட்டை வளாகத்தில் கிளிஞ்சல்மேடு பவித் (20) மற்றும் 17 வயது சிறுவன் என இருவா் கஞ்சா விற்றது தெரியவந்தது.

அவா்களை பிடித்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலம் 2 மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த தெய்வேந்திரன் (34) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கிவருவதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, போலீஸாா் நாகப்பட்டினம் சென்று தெய்வேந்திரனை கைதுசெய்து, அவரிடமிருந்த 17 கஞ்சா பொட்டலங்கள், ஒரு மோட்டாா் சைக்கிள், ரூ. 3,262 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா வழக்கில் தீவிர நடவடிக்கை எடுத்த திருப்பட்டினம் போலீஸாா், சிறப்புப் படையினரை மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com