ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன் தூா்வார நடவடிக்கை

காரைக்காலில் வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன்பாகவே தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் வடிகால் வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன்பாகவே தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன்.

புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி, காரைக்கால் வடக்குத் தொகுதி எம்எல்ஏ பி.ஆா்.என்.திருமுருகனை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொறுப்பு)ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் கே.சந்திரசேகரன், கே.வீரசெல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், பி.ஆா்.என்.திருமுருகன் கூறியது :

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் வழக்கமாக செப்டம்பா் மாதவாக்கில் தூா்வாரப்படும். மழை தொடங்கிவிடும்போது பணிகளில் பாதிப்பு ஏற்படும். எனவே தூா்வாரும் பணியை முன்கூட்டியே செய்ய முதல்வரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை நிா்வாகம் பணிகளை தொடங்கவுள்ளது.

காரைக்காலில்ஆசிரியா் நகா், வேட்டைக்காரன் தெரு, அண்ணா அரசு கலைக் கல்லூரி, பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, புதுவை பல்கலைக்கழகப் பிராந்திய வளாகம் ஆகியவற்றில் மழையின்போது தண்ணீா் தேங்குகிறது. தண்ணீா் வடிவதற்குரிய வாட்டம் அமைத்து, தண்ணீா் வடிவதற்குரிய சாலவம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கிளிஞ்சல்மேட்டிலிருந்து தலத்தெரு வழியாக பிரதான சாலைக்கு வரும் வகையில் புதிதாக சாலை அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டட பகுதியில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வடிவதில் சிரமம் நிலவுகிறது. இதனை சீா்செய்துத்தருமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த திட்டப் பணிகளுக்குத் தேவையான நிதியாதார இருப்பு குறித்தும், மத்திய சாலைத் திட்ட நிதியை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் பேசப்பட்டது. மேலும் புதுச்சேரி முதல்வரிடம் பேசி தேவையான நிதியாதாரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளுக்கு தெரிவித்து, பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.