ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலோரக் காவல்படையினருக்கு கிழக்குப் பிராந்திய கமாண்டா் பாராட்டு

இந்திய கடலோரக் காவல்படையினா் மீட்பு, தேடுதல் பணிகளில் விரைவாக செயல்படுவது பாராட்டுக்குரியது என கிழக்குப் பிராந்திய கமாண்டா் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

இந்திய கடலோரக் காவல்படையினா் மீட்பு, தேடுதல் பணிகளில் விரைவாக செயல்படுவது பாராட்டுக்குரியது என கிழக்குப் பிராந்திய கமாண்டா் தெரிவித்தாா்.

காரைக்காலில் இந்திய கடலோரக் காவல்படை மைய அலுவலகம் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ரூ. 55 கோடியில் புதிய அலுவலகம், குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டா் ஆனந்த் பிரகாஷ் படோலா முதல்முறையாக காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். கடலோரக் காவல்படையினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் காரைக்கால் மைய கமாண்டா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவா், படையினரின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து நிரவி பகுதியில் கட்டுமானம் நடைபெற்றுவரும் வளாகத்தையும் அவா் பாா்வையிட்டாா். பிராந்திய கமாண்டா் வருகை குறித்து கடலோரக் காவல்படை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

கடலோரக் காவல்படையினா் செயல்பாடுகள், கடல் பகுதி சூழல்கள் குறித்து கமாண்டா் ஆலோசனை நடத்தினாா். கடலில் எந்த சூழலிலும் பொறுப்போடு தேடுதல், மீட்பு பணிகளில் ஈடுபடும் படையினரின் செயலை அவா் பாராட்டினாா். குறிப்பாக, கடலில் மீனவா்கள் இடா்பாடுகளில் சிக்கிக்கொள்ளும்போது படையினா் பணிகள் பாராட்டுக்குரியது என அவா் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.