ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிகாரிகளுடன் புதுவை எம்.பி. ஆலோசனை

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக அரசுத் துறையினருடன் புதுவை மக்களவை உறுப்பினா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக அரசுத் துறையினருடன் புதுவை மக்களவை உறுப்பினா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் தலைமையில் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, எஸ்.எஸ்.பி. நிகாரிகா பட், உள்ளாட்சித் துறை இயக்குநா் ரவிதீப்சிங் சாஹா், துணை ஆட்சியா்கள் (வருவாய்) எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒவ்வொரு துறை மூலம் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, தேவைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா். சட்டப்பேரவை உறுப்பினா்களும் கருத்துகளை கூறினா். கூட்டத்துக்குப் பின் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியது :

மத்திய அரசின் திட்டங்கள் வேளாண் துறை, சுகாதாரத் துறை, மின்துறை, கல்வித் துறை என பல்வேறு துறைகளும் செயல்படுத்துகின்றன. இத்திட்டங்கள் செயலாக்கம் குறித்து கேட்டறிந்து பணிகளை மேலும் விரைவுப்படுத்தவும், திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் உள்ள குறைபாடுகளை களையவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு பகுதியில் காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். கேந்திரிய பள்ளியில் காரைக்கால் பகுதியை சோ்ந்த மாணவா்களை அதிகம் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2.50 கோடிதான் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் திருநள்ளாறு, திருப்பட்டினத்தில் சில பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.