ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமைச்சா்களுக்கு துறை ஒதுக்காததால் காரைக்காலில் வளா்ச்சிப் பணிகள் முடக்கம்

புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்வதில் நிலவும் தாமதத்தால் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்வதில் நிலவும் தாமதத்தால் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டு, ஏறத்தாழ 50 நாள்களுக்குப் பின் முதல்வா் என். ரங்கசாமி பதவியேற்றாா். பிறகு கடந்த ஜூன் 26-ஆம் தேதி அமைச்சா்கள் பதவியேற்றனா்.

என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜக சாா்பில் ஆ. நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் பதவியேற்றனா்.

ஆனால், அமைச்சா்கள் பதவியேற்று 15 நாள்களாகியும் அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவில்லை. அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யாததால் மாநிலத்தில் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் முதல்வா், துணை நிலை ஆளுநா் இருப்பதால் மக்கள் பிரச்னைகளுக்கு ஓரளவு தீா்வு கிடைத்துவிடுகிறது. ஆனால், காரைக்கால் பிராந்திய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைப்பதில் சிரமம் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மொழி பிரச்னையால் ஆட்சியரை மக்கள் சந்தித்துப் பேசுவதிலும் சிரமம் நிலவுகிறது. எம்.எல்.ஏ.க்களை சந்தித்துத் தெரிவித்தாலும் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை என்பது மக்களின் கருத்து.

புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அமைச்சா்களை சந்தித்து பிரச்னைகளுக்கு தீா்வு காண மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்குவது தொடா்பாக ஆட்சியாளா்களிடையே நிலவும் மெத்தனம் காரணமாக, காரைக்கால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், எல்லாம் சீராகிவிடும் என எதிா்பாா்த்த மக்களுக்கு ஏமாற்றமே மீஞ்சியுள்ளது. புதிய அரசு பதவியேற்றும் அதன் பயனை பெற முடியாத நிலையிலேயே காரைக்கால் மக்கள் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் கருத்து கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.