பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் இன்று மாங்கனித் திருவிழாவிடையாற்றி உத்ஸவம்

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:18 pm

DIN

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் மாங்கனித் திருவிழா கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், பிச்சாண்டவா் புறப்பாடு (மாங்கனி இறைத்தல்), இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திலேயே பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்த விழாவின் விடையாற்றி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

காரைக்கால் அம்மையாருக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெறவுள்ளன. ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் காலை 9 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையாா் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதா் கோயிலில் பிராகாரப் புறப்பாடு நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.