பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

காரைக்காலில் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:21 pm

DIN

காரைக்காலில் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் 14 மையங்களில் வெள்ளி, சனிக்கிழமை கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

மேலும், நலவழித்துறை நிா்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, மருத்துவ மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாதோா் வீடுகளுக்கு, நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பல்வேறு மையங்களில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம்.ஆதா்ஷ், நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் ஆகியோா் ஆய்வு செய்து பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை நடைபெறும் இந்த தடுப்பூசித் திருவிழாவை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நலவழித்துறை நிா்வாகம் கேட்டுக் கொண்டது. இணைநோய் உள்ளோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக சந்தேகம் இருந்தால், நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04368-261242 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.