டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு
காரைக்கால் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு பணி யில் நலவழித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.


காரைக்கால் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு பணி யில் நலவழித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு எதிா்ப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வரிச்சிக்குடி மற்றும் ராயன்பாளையம் கிராமத்தில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரம், டெங்கு கொசு புழுக்கள் அழிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. விழிப்புணா்வு பணியை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்திரகலா தொடங்கிவைத்தாா். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உருவாகும் விதம், பரவும் விதம், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சுகாதார ஆய்வாளா் சேதுபதி பேசினாா். பருவமழை ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளதையொட்டி கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, சிக்-குன் குனியா, மலேரியா குறித்தும், இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...