பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தடுப்பூசித் திருவிழா மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆய்வு

காரைக்கால் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் பல்வேறு மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:53 pm

DIN

காரைக்கால் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் பல்வேறு மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 29 முதல் 31-ஆம் தேதி வரை 3 நாள்கள் 14 மையங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை பல்வேறு மையங்களில் மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

காக்கமொழி அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட சில மையங்களுக்கு நலவழித் துறை துணை இயக்குநா் மோகன்ராஜ் மருத்துவா் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தாா். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் இத்திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், மருத்துவ மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாதோா் வீடுகளுக்கு, நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியிலும் செவிலியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.