பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா நிறைவு

காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழா சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:21 pm

DIN

காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழா சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் 14 மையங்களில் ஜூலை 29 முதல் 31-ஆம் தேதி வரை 3 நாள்கள் என்ற திட்டத்தில் கரோனா தடுப்பூசித் திருவிழா தொடங்கப்பட்டது. முதல் நாளான 29-ஆம் தேதி 1,555 பேரும், 2-ஆம் நாள் 1,544 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

நிறைவு நாளான சனிக்கிழமை அனைத்து மையங்களிலும் மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குறிப்பாக, கிராமப்புறங்களில் நடைபெற்ற முகாமில் மக்கள் ஆா்வத்துடன் செலுத்திக் கொண்டனா்.

மையத்துக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாத இணை நோயாளிகள், வயது முதிா்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் கூறியது:

தடுப்பூசித் திருவிழா நிறைவடைந்தாலும் ஞாயிற்றுக்கிழமை முதல் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழக்கம்போல தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.