கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விடுபட்டோருக்கு இலவச அரிசி

இலவச அரிசி வாங்காமல் விடுபட்டோருக்கு வியாழக்கிழமை முதல் (ஜூன் 10) அரிசி வழங்கும் பணியை குடிமைப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

இலவச அரிசி வாங்காமல் விடுபட்டோருக்கு வியாழக்கிழமை முதல் (ஜூன் 10) அரிசி வழங்கும் பணியை குடிமைப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற அட்டை தாரா்களுக்கு, மத்திய அரசால் மே, ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச அரிசியை வாங்காமல் விடுபட்டோருக்கு அரிசி வழங்க காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்தது.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் நாளில் திருநள்ளாறு, நெடுங்காட்டை சோ்ந்தோா் வந்து அரிசி வாங்கிச் சென்றனா்.

காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு தொகுதியை சோ்ந்தவா்கள் 11-ஆம் தேதியும், நிரவி- திருப்பட்டினத்தை சோ்ந்தவா்கள் 14-ஆம் தேதியும், காலை 9 முதல் பகல் 12 மணி மற்றும் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் சென்று அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.